விஸ்வரூபம் திரைப்படம் சர்ச்சை சம்மந்தமாக இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்தியாளர்களை சந்தித்தார் இது சம்மந்தமாக எதிர்கட்சிகள் செய்தும் விமர்சனங்களை ஜெயலலிதா முற்றிலுமாக மறுத்தார், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவே படத்திற்கு தடைவிதிக்கப்பட்டது என்று தெரிவித்தார், பிரச்சனைக்கு கமலின் பிடிவாதம்தான் காரணம் என்றும் தெரிவித்தார், கமல் சொல்வதுபோல் விஸ்வரூபம் படத்தை எதிர்பவர்கள் சிறு குழுக்கள் அல்ல, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 7.5 லட்சம் உறுப்பினர்களை கொண்ட மாபெரும் அமைப்பு என்றார், இஸ்லாமிய குழுக்களோடு பேசி சுமுக தீர்வை ஏற்படுத்த தமிழக அரசு உதவும் என்றும் தெரிவித்தார்,
No comments:
Post a Comment