Tuesday, 22 January 2013

குண்டு வெடிப்பு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள் 10 பேர் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள்: உள்துறை செயலர் தகவல்....



குண்டு வெடிப்பு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள்  10 பேர் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள்: உள்துறை செயலர் தகவல்....

நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 10 பேர், ஆர்.எஸ்.எஸ். இயக்கதுடன் தொடர்புடையவர்கள் என்று இந்திய உள்துறை அமைச்சக செயலர் கூறியுள்ளார்.

இதுகுறித்து உள்துறை செயலர் ஆர்.கே.சிங் டெல்லியில் கூறியதாவது:-

சம்ஜாதா எக்ஸ்பிரஸ், மெக்கா மஸ்ஜித், தர்கா ஷெரிப் ஆகிய குண்டுவெடிப்புகள் குறித்து விசாரணை நடத்தினோம். இதில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதனுடன் தொடர்பில் உள்ள 10 பேர் இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்த ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. சாட்சியங்களின் வாக்குமூலங்களும் எங்களிடம் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேற்குறிப்பிட்ட குண்டு வெடிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 10 நபர்களின் பெயர்களையும் உள்துறை செயலர் ஆர்.கே. சிங் வெளியிட்டார்.

No comments:

Post a Comment