Thursday, 31 January 2013
விஸ்வரூபத்தை எதிருக்கும் இஸ்லாமிய அமைப்புகள் சிறுகுழுக்கள் அல்ல-ஜெயலலிதா
Saturday, 26 January 2013
இன்று இந்திய குடியரசு தினம்....
இந்தியாவின் சுதந்திரத்துக்கு இரத்தம் சிந்திய சமுதாயம் முஸ்லிம் சமுதாயம். தனது சதவீதத்துக்கு அதிகமாக தியாகம் செய்த சமுதாயம் முஸ்லிம் சமுதாயம். அத்தகைய முஸ்லிம் சமுதாயத்தின் இன்றைய நிலை இந்தியாவில் என்ன?

Tuesday, 22 January 2013
“விஸ்வரூபம் திரைப்படத்தை ஓடவிட மாட்டோம்” தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!!
நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதை ஜனவரி 25 அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அந்தப்படத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்துள்ளதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து நேற்று (21.01.2013) அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாஸன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியுள்ளார்.
அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்
அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால்,அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவசர நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்துள்ளது
இப்படிக்கு
ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
(பொதுச் செயலாளர்)
குண்டு வெடிப்பு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள் 10 பேர் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள்: உள்துறை செயலர் தகவல்....
குண்டு வெடிப்பு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள் 10 பேர் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள்: உள்துறை செயலர் தகவல்....
நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 10 பேர், ஆர்.எஸ்.எஸ். இயக்கதுடன் தொடர்புடையவர்கள் என்று இந்திய உள்துறை அமைச்சக செயலர் கூறியுள்ளார்.
இதுகுறித்து உள்துறை செயலர் ஆர்.கே.சிங் டெல்லியில் கூறியதாவது:-
சம்ஜாதா எக்ஸ்பிரஸ், மெக்கா மஸ்ஜித், தர்கா ஷெரிப் ஆகிய குண்டுவெடிப்புகள் குறித்து விசாரணை நடத்தினோம். இதில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதனுடன் தொடர்பில் உள்ள 10 பேர் இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்த ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. சாட்சியங்களின் வாக்குமூலங்களும் எங்களிடம் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மேற்குறிப்பிட்ட குண்டு வெடிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 10 நபர்களின் பெயர்களையும் உள்துறை செயலர் ஆர்.கே. சிங் வெளியிட்டார்.
Sunday, 20 January 2013
சென்னை மெட்ரோ ரெயில் பணியில் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பு!
மத்திய மாநில அரசுடன் இணைந்து செயல்படும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவணம் பல்வேறு துறைகளுக்கு ஆட்களை பணியில் சேர்க்க உள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
இதற்கு ஆன்லைன் பதிவு 19-1-2013 லிருந்து துவங்குகின்றது. chennaimetrorail.gov.in என்ற இணையதள முகவரில் விருப்பம் உள்ளவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் 20-2-2013.
இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டனை : அறிவு ஜீவிகளின் இரட்டை முகங்கள்!
குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்பவருக்கு சவூதி நீதி மன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள சில எழுத்தாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இவர்களின் விமர்சனத்திலிருந்து இவர்களுக்கு நிலையான கொள்கையும், தெளிவான பார்வையும் , பொது அறிவும் இல்லை என்பது தெரிகிறது.
தனக்குத்தானே முரண்படுவதுதான் பொய் என்பதன் அளவுகோல். இது நமது நாட்டுஅறிவு ஜீவிகளிடம் அதிகம் காணப்படுகிறது.
டெல்லி மாணவி கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று இவர்கள் புலம்பினார்கள். சட்டமும் நீதி மன்றமும் முடிவெடுக்கவேண்டிய விஷயத்தில் மக்களைத் தூண்டிவிட்டு அரசாங்கம் தூக்குத் தண்டைனை விதிக்க வேண்டும் என்று பேச வைத்தார்கள்.
போகக்கூடாத நேரத்தில் ஆண் நண்பருடன் நள்ளிரவில் உல்லாசமாக சுற்றிய பெண்ணாக இருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட அநீதிக்காக இவர்கள் குரல் கொடுத்தார்கள்.
பருவ வயது அடைந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்காக மரண தண்டனை அளிக்க வேண்டும் என்பது இவர்களது கொள்கையாக இருந்தால், இவர்களுக்கு சிந்திக்கும் திறனும் மூளையும் மனசாட்சியும் இருந்தால் இலங்கைப் பெண் விஷயமாக எந்த நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும்?
ஒரு குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக ரிஸானாவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாணவி கொல்லப்பட்டதற்கு மரணதண்டனை நியாயம் என்றால், அதைவிட ஆயிரம் மடங்கு நியாயம் நியாயம் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் உள்ளது.குழந்தையின் உயிர், உயிர் இல்லையா?
சிறுமிக்கு தண்டனையா என்றும் இவர்கள் இப்போது கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் மைனர் பையனுக்கும், தூக்குத் தண்டனை கொடுக்கவேண்டும் என்றும், மைனர் வயதை 14ஆகக் குறைக்க வேண்டும் என்றும் இவர்கள்தான் கூப்பாடு போட்டார்கள். அதிகமான மாநில அரசுகளும் இதைக் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளன. இவர்கள் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் மைனர் என்பதன் அளவுகோலைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஆனால் பருவ வயதை அடைவதுதான் மேஜர் வயது என்று இஸ்லாம் அன்றே கூறிவிட்டது.
சவூதியில் அதுதான் சட்டமாக உள்ளதால் 17வயதுப் பெண் அந்தச் சட்டப்படி மேஜர் என்பதால் மைனர் என்ற அடிப்படையில் கருணை கோர முடியாது.
டெல்லி மாணவி பிரச்சினையில் மைனரை மேஜர் ஆக்கப்பார்க்கிறார்கள். சவூதி விஷயத்தில் மேஜரை மைனர் ஆக்க முயல்கிறார்கள். இவர்களது சிந்திக்கும் திறனில் கோளாறு இருக்கிறது என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது.
இந்தியக் குழந்தையாக அது இல்லாததால், அதன் விபரீதம் இவர்களுக்கு விளங்கவில்லையா? மிருக புத்திரன்களாக இருக்கும் எழுத்தாளர்கள், ஜோசப் பாபா பையன்கள் மற்றும் விகடக்கச்சேரி நடத்தும் கோமாளிகள் தங்களின் குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தால், இதே நியாயத்தை இவர்கள் பேசுவார்களா? பறி கொடுத்தவர்களின் நிலையில் இருந்தும், பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் இருந்தும் இதைப்பார்ப்பதுதான் சரியான பார்வையாகும்.
அனைவருக்கும் சமநீதி என்பதுதான் நீதி செலுத்துதலில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயமாகும். டெல்லி மாணவிக்கு ஒரு நீதியும், சவூதி குழந்தைக்கு வேறு நீதியும் கேட்பது அனைவருக்கும் சமநீதி என்ற அடிப்படைக்கு எதிரானதாகும்.
அடுத்ததாக இதை தர்க்க ரீதியாக நியாயப்படுத்த அந்தப் பெண்ணானவர் குழந்தையைக் கொல்லவில்லை என்று வேறு கதை அளந்து கொண்டுள்ளனர்.
ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பததை பேனா பிடித்தவர்கள் முடிவு செய்ய இயலாது. எந்த நாட்டில் குற்றம் நடக்கிறதோ அந்த நாட்டின் சட்டமும் நீதிமன்றமும்தான் அதை முடிவு செய்ய இயலும்.
குழந்தை கொல்லப்பட்டபோது சாட்சிகளாகவோ அல்லது உடலைப் பரிசோதித்த மருத்துவர்களாகவோ இவர்கள் இருக்கவில்லை. விசாரணை அதிகாரிகளாகவும் இருக்கவில்லை. மேலும் வழக்கை விசாரித்த நீதிபதிகளாகவோ அல்லது நீதி மன்ற சாட்சிகளாகவோ இருக்கவில்லை. இது குறித்து முடிவு செய்யவேண்டிய ஆவணமும், ஆதாரமும், அறிவும் இவர்களிடம் இல்லாதபோது அந்தப் பெண் அப்பாவி என்று தீர்ப்பு எழுதுவதுதான் அறிவுடையவர்களின் செயலா?
லஞ்சம் ஊழலுக்கு இடமில்லாமல், நியாயமாக விசாரிக்கும் ஒரு நாட்டில் அந்த நாட்டுச் சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், அதுதான் குற்றவாளி என்பதற்கான ஆதாரம்.
அஜ்மல் கசாப் அப்பாவி, அவனைத் தூக்கில் போட்டது அநியாயம் என்று சவூதி அறிவு ஜீவிகள் எழுதினால், இவர்கள் அந்த அதிகாரத்தை சவூதி அறிவு ஜீவிகளுக்கு வழங்குவார்களா?
கோவை குண்டு வெடிப்பு அரசாங்கமே நடத்தியது, அதில் கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பாவிகள் என்று இவர்களைப்போல் கற்பனை செய்து எழுதினால், அதை மிருகபுத்திரன்களும் விகடக் கோமாளிப் பையன்களும் ஏற்றுக் கொள்வார்களா?
இவர்களுக்கு கொஞ்சமும் மூளை இல்லை, மனசாட்சியும் இல்லை, உலக அறிவும் இல்லை, சட்ட அறிவும் இல்லை என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
பெண் என்பதால் மரண தண்டனை கூடாது என்று இவர்கள் நினைத்தால் இப்போதும் இவர்கள் அறிவற்றவர்கள் என்றுதான் நிரூபித்துள்ளார்கள். ஆணும் பெண்ணும் சமம் என்று எழுதிவிட்டு குற்றம் செய்வதில்மட்டும் சமம் இல்லை என்று இவர்களது மூளை தீர்ப்பளிக்கிறது என்றால் இது மனநோயில்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்?
சவூதியில் வசிக்கும் ஒரு இந்தியக் குழந்தையை, இந்தியப் பெண் கொலை செய்தாலும், சவூதியில் இப்படித்தான் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும். அப்போது இவர்கள் குழந்தையின் பக்கம் பேசியிருப்பார்களா அல்லது கொலை செய்தவர் பக்கம் பேசி இருப்பார்களா? நாட்டு மக்கள் அனைவரும் குழந்தையின் பக்கம்தான். நின்றிருப்பார்கள். அதை எதிர்த்து இவர்கள் வாய் திறந்தால் அடித்து உதைக்கப்படடு இருப்பார்கள்.
கோவையில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் இவர்கள் பேசிய நியாயம் இப்போது காணாமல் போனது ஏன்? மரண தண்டனை பெற்ற பெண் இந்து மதத்தவராக இருந்திருந்தால், இந்து என்பதற்காக மரண தண்டனை கொடுத்துவிட்டார்கள் என்று கதையை மாற்றி எழுதியிருப்பார்கள். நல்ல வேலை கொலை செய்த பெண்ணும் முஸ்லிமாக இருந்ததால் இந்தக் கதையை இவர்கள் எழுத முடியவில்லை.
கொலை செய்த பெண் இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், இந்தியர்கள் என்ன கிள்ளுக்கீரையா என்று இந்த கூறு கெட்ட அறிவு ஜீவிகள் புலம்பித் தள்ளியிருப்பார்கள். நல்ல வேளை அப்பெண் இலங்கை வாசியாக அமைந்துவிட்டார்.
மன்னரின் குடும்பப் பெண் விபச்சாரம் செய்தபோது மரண தண்டனை அளித்த சவூதியில் அந்நிய நாட்டவர்கள் என்பதற்காக குற்றங்களில் சலுகை காட்டப்படுவது இல்லை. மற்ற விஷயங்களில் சொந்த நாட்டவர்களுக்கு சலுகை அளித்தாலும், கொலைக் குற்றத்தில் எல்லாம் சலுகை காட்டமாட்டார்கள்.
இந்தியக் குழந்தையை சவுதிக்காரன் கொன்று, அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இதே தீர்ப்புத்தான் வழங்கப்பட்டிருக்கும்.
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் விமர்சிப்பதுதான் இவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது. மக்களை தூண்டிவிடக்கூடிய பிரச்சினை வராதவரை நடுநிலை வேஷம் போடுவார்கள். எதில் மக்களைத் தூண்டி விட முடியுமோ அதுபோன்ற பிரச்சினைகள் கிடைத்தால், இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.அறிவு ஜீவிகளின் இந்த இரட்டை முகம் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வெளியீடு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
Wednesday, 16 January 2013
நமதூர் அனைத்து முஹல்லா ஜமாத்துகளுக்கும் அழகிய வேண்டுகோள்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்….)
அன்புக்குரிய பள்ளிவாசல் ஜமா-அத் நிர்வாகிகளுக்கு,
இந்த மடல் தூய இஸ்லாமிய சிந்தனையுடனும், பூரண உடல் நலத்துடனும் உங்களை சந்திக்கட்டுமாக!
இந்த மடல் தூய இஸ்லாமிய சிந்தனையுடனும், பூரண உடல் நலத்துடனும் உங்களை சந்திக்கட்டுமாக!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை புகழ்கின்றோம் என்ற பெயரில் சில பள்ளிவாசல்களில் மவ்லூதுகள் என்ற பெயரில் பல பாடல்கள் ஓதப்பட்டு வருகின்றன. ஆனால், இறைவனது திருப்தியைப்பெறும் நோக்கத்தில் ஓதப்படும் மவ்லூதுகளினால் இறைவனது கோபப்பார்வைதான் ஏற்படுகின்றது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
”பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில்) அவனைவிடுத்து வேறுயாரையும் அழைக்காதீர்கள்” (அல்குர்-ஆன் 72:18) என்ற அல்லாஹ்வுடைய கட்டளையை புறந்தள்ளும் விதமாகத்தான் நபிகள் நாயகத்தை அழைத்து பாடப்படும் மவ்லூது வரிகள் அமைந்துள்ளன.
நபிகள் நாயகம் அவர்களை இறைவனுடைய நிலைக்கு உயர்த்தும் பாடல்வரிகளும் இதில் ஏராளமாக உள்ளன.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் ஹராமாக்கிவிட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். (அல்குர்ஆன் 5:72). எனவே இத்தகைய மாபாதக இணைவைக்கும் காரியத்தை விட்டு நாம் விலகவேண்டும்.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் ஹராமாக்கிவிட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். (அல்குர்ஆன் 5:72). எனவே இத்தகைய மாபாதக இணைவைக்கும் காரியத்தை விட்டு நாம் விலகவேண்டும்.
மேலும், இத்தகைய இணைவைப்பு காரியங்களை ஏகத்துவ மையமாக திகழ வேண்டிய பள்ளிவாசல்களில் ஒருபோதும் நாம் அனுமதிக்கக்கூடாது. பள்ளிவாசல்களின் பொறுப்பாளர்களாக இருக்கக்கூடிய நீங்கள் இத்தகைய இணைகற்பிக்கும் மாபாதக செயல்களை உங்களது பொறுப்பில் பள்ளிவாசல்களில் செய்ய அனுமதியளிப்பீர்களேயானால் அல்லாஹ் இது குறித்து உங்களிடம் விசாரிப்பான். ஏனெனில், நபிகளார் கூறிக்காட்டியுள்ளார்கள்:
”உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். ஒவ்வொருவரும் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் குறித்து விசாரிக்கப்படுவீர்கள்”. (ஆதாரம்: புகாரி: 893)
எனவே, இணைவைக்கும் பெரும்பாவத்திற்கு நம்மை ஆளாக்கிவிடும் மவ்லூது, மற்றும் இது போன்ற பாவங்களான தர்கா, தட்டு, தகடு, தாயத்து, போன்ற இணைவைப்பு செயல்களையும், மற்றும் நம்மை வழிகெடுக்கும் பித்அத்களையும் (மார்கத்தின் பெயரால் புதிதாக புகுத்தப்படும் அனாச்சாரங்களையும்) உங்களது பொறுப்பின் கீழ் இருக்கக்கூடிய பள்ளிவாசல்களில் அனுமதிக்காமல் தடைசெய்யும் படி உரிமையுடன் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். இத்தகைய செயல்களை இனிமேலும் நீங்கள் அனுமதித்தால் உங்களது பொறுப்பின் கீழுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் வழிகெடுத்த பாவத்தையும் நீங்கள் சேர்த்து சுமக்க நேரிடும் என்பதையும் உங்களுக்கு சுட்டிக்காட்டுகின்றோம்.
(குறிப்பு: இத்துடன் மவ்லூது வரிகள் திருக்குர்-ஆன் வசனங்களோடு எவ்வாரெல்லாம் மோதுகின்றன என்ற பிரசுரத்தையும் இணைத்துள்ளோம். பார்வையிடவும்)..ஓதும் இறைநெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும்
இப்படிக்கு,
தங்கள் இம்மை மறுமை நலன் நாடும்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத்-லால்பேட்டை
ATDC-யில்டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...
ஆடைபயிற்சிமற்றும்வடிவமைப்புடிப்ளமோ படிப்புக்கு தகுதியானமாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்தியஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழாக, ஆயத்தஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்புமையம் செயல்பட்டு வருகிறது. ATDC -யில்(Apparel Training and Design Centre)வழங்கப்படும் படிப்புகள்: இரண்டு வருட அட்வான்ஸ் டிப்ளமோ படிப்பில் பேஷன்டிசைன், அப்பேரல் மெனுபக்சுரிங். .
ஒரு வருட டிப்ளமோ படிப்பில் பேஷன் டிசைன் டெக்னாலஜி, அப்பேரல்மெனுபேக்சுரிங் டெக்னாலஜி, அப்பேரல் பேட்டன் மேகிங் அன்ட் கேடு,அப்பேரல்குவாலிட்டி அஸுரன்ஸ் அன்ட் கம்பலைன்ஸ், நிட்வியர் மெனுபேக்சுரிங்டெக்னாலஜி.
ஆறு மாத சான்றிதழ் படிப்பில் புரோடக்ஷன் சூப்பர்விஷன் அன்ட் க்வாலிட்டிகன்ரோல்,அப்பேரல் பேட்டன் மேக்கிங், நிட்வியர் மெனுபாக்சுரிங் டெக்னாலஜி, அப்பேரல்எக்ஸ்போர்ட் டெக்னாலஜி ஆகியபடிப்புகள் வழங்கப்படுகின்றன.
இது மட்டும் அல்லாமல் குறுகிய கால படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கையேடு மற்றும் விண்ணப்பக் கட்டணத்தை பெற ரூ.150 வரைவோலை செலுத்திகல்விநிறுவனத்தில் பெற்று கொள்ளலாம். தபால் மூலம் அனுப்ப ரூ.200செலுத்தவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், வரைவோலை இணைத்து ஜனவரி25ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களுக்கு Apparel Training and Design Centre (ATDC) கீழ் கண்ட இணையதளத்தை பார்வை இடவும்
http://www.atdcindia.co.in/
டெக்னீஷியன் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன...
செயில் நிறுவனத்தில் டெக்னீஷியன் டிரெய்னி பணியிடங்கள்
செயில் நிறுவனத்தில் டெக்னீஷியன் டிரெய்னி பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
செயில் நிறுவனத்தில் டெக்னீஷியன் டிரெய்னி பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னீஷியன் டிரெய்னி - 85
கல்வித் தகுதி: மெக்கானிக்கல்/ எலெக்ட்ரிக்கல்/ சிவில்/ எலெக்ட்ரானிக்ஸ் - இன்ஸ்ட்ரூமெண்டேஷன்/கெமிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.01.2013
மேலும் விவரங்களுக்கு : http://sail.shine.com
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் 250 காலியிடங்கள்
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் கிராஜுவேட் என்ஜினீயர் பணிக்குவிண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிக்கேஷன், இன்ஸ்ட்ருமெண்டேஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம்பெற்றிருக்க வேண்டும். ‘கேட் 2013’ தேர்வு எழுதுபவர்கள் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
25 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ.24,900 - 50,500
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.02.2013
விவரங்களுக்கு: www.hindustanpetroleum.com
Monday, 14 January 2013
லால்பேட்டை கிளை சார்பாக மருத்துவ நிதியுதவி....
TNTJ கடலூர் லால்பேட்டை கிளை சார்பாக 11.01.2013 அன்று லால்பேட்டை TNTJ கிளையின் குர்பானி தோல் விற்ற நிதியிலிருந்து அப்துல்லாஹ் என்ற ஏழைச் சிறுவனின் வயிற்றுப் புண் அறுவைச் சிகிச்சைக்காக அவரது தந்தையிடம் ரூபாய்.10,000/- வழங்கப்பட்டது.
இந்த சிறுவனின் உடல் சுகமடைய துஆ செய்யுங்கள்.

தனி நபர் தாவா!
கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் கடந்த 11.01.2013 அன்று மாலை தனி மனிதர்களை சந்தித்து ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது. லால்பேட்டையை சார்ந்த ரஹ்மத் நகரில் சுமார் 10 நபர்களை இவ்வாறு சந்தித்து தாவா செய்யப்பட்டது.

இந்த சிறுவனின் உடல் சுகமடைய துஆ செய்யுங்கள்.
தனி நபர் தாவா!
கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் கடந்த 11.01.2013 அன்று மாலை தனி மனிதர்களை சந்தித்து ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது. லால்பேட்டையை சார்ந்த ரஹ்மத் நகரில் சுமார் 10 நபர்களை இவ்வாறு சந்தித்து தாவா செய்யப்பட்டது.
ஷிர்க்கு எதிராக லால்பேட்டையில் தீவிர பிரச்சாரம்!
TNTJ லால்பேட்டை கிளை சார்பாக 09.01.2013 புதன்கிழமை அன்று லால்பேட்டை ரஹ்மானியா வீதியில் 8 வீடுகளில் ஷிர்க்கின் விபரீதங்களை விளக்கி அங்கிருந்த தகடு, படிகாரக்கல் போன்றவை அகற்றப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!

TNTJ லால்பேட்டை கிளை சார்பாக 10.01.2013 அன்று லால்பேட்டையைச் சார்ந்த
ஜாகிர் ஹுஸைன் நகரில் இணைவைப்புக்கு எதிரான பிரச்சாரத்தின் போது படிகாரக் கல், திருஷ்டி மிளகாய் போன்றவை அகற்றப்பட்டன. சுமார் 15 வீடுகளில் அன்று தாவா செய்யப்பட்டது.


TNTJ லால்பேட்டை கிளை சார்பாக 10.01.2013 அன்று லால்பேட்டையைச் சார்ந்த
ஜாகிர் ஹுஸைன் நகரில் இணைவைப்புக்கு எதிரான பிரச்சாரத்தின் போது படிகாரக் கல், திருஷ்டி மிளகாய் போன்றவை அகற்றப்பட்டன. சுமார் 15 வீடுகளில் அன்று தாவா செய்யப்பட்டது.
Saturday, 12 January 2013
விண்வெளி திருவிழா 2013 (Aerospace festival 2013) ...
விண்கலங்கள் மற்றும் வானூர்தி பற்றிய அறிவை வளர்க்கும் வகையில் வின்வெளி திருவிழா 2013ஐ (Aerospace festival 2013) தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. PMU(Periyar PURA (Providing Urban Amenities in Rural Areas)) (கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகள் வழங்குதல்) என்ற திட்டத்தின் கீழ்இந்நிகழ்ச்சி ஏற்பாடு செயப்பட்டுள்ளது. நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை கிராமப்புறங்களில் உள்ளமாணவர்கள் அறிந்து கொள்ளவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
இந்நிகழ்ச்சியில் நம் நாட்டின் முன்னனி நிறுவனங்களின் முதன்மையான கண்டுபிடிப்புகளான BrahMos,ISRO, DRDO, NAL, HAL, TNSCST, ADA, ADE and IISCவை இடம் பெற உள்ளன. மேலும் தற்போதைய மற்றும்எதிர்கால ஆராய்சிகள் பற்றிய தகவல்களும் உள்ளன.விஞ்ஞானி APJ.அப்துல் கலாம், இஸ்ரோ முதன்மை இயக்குநர் மயில்சாமி அண்ணா துரை மேலும் இதுபோன்ற பல விஞ்ஞானிகள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.வானூர்தி மற்றும் விண்வெளி (Aeronautical and Aerospace Engineering) பற்றிய அறிவை வளர்ப்பதும், நிகழ்காலமற்றும் எதிர்கால கண்டுபிடிப்புகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனபதே இந்நிகழ்சியின்முக்கிய நோக்கமாகும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வானூர்தி மற்றும் விண்வெளி பொறியலின்முக்கியதுவம் மற்றும் பயன்பாடுகளை அறிந்து கொள்வதற்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்.ஜனவரி 21 – 2013முதல் ஜனவரி23 – 2013மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஜனவரி 17– 2013க்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு கட்டணம் உண்டு.மேலும் தகவல்களுக்கு கீழ் கண்ட இணையதளத்தை பார்வை இடவும்http://www.pmu.edu/aerofest/.
Sunday, 6 January 2013
Wednesday, 2 January 2013
தபூகில் கொள்ளுமேட்டு பெண்ணின் ஜனாஜா நல்லடக்கம்...
இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்!...
அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!
Indian Embassy, மற்றும் Ministry of Interior ஆகிய அலுவலகங்களில் ஆகவேண்டிய அனைத்து பணிகளையும் ஜித்தா மண்டல TNTJ விரைந்து முடித்ததால் இரண்டு தினங்களில் நல்லடக்கம் நடைபெற்றது,
வல்ல இறைவனிடம்
இவருக்காக துஆச் செய்யுங்கள்!!
“நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளாதீர்கள்!! அல்லாஹ்வை அஞ்சுங்கள்!!!
அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்”
[உலகப்பொதுமறை-திருக்குர்ஆன் - 5 : 2]
இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜுவூன்!...
Tuesday, 1 January 2013
சிறைநிரப்பும் போராட்டம் ஒரு வாரத்திற்கு தள்ளிவைப்பு!!
கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி நள்ளிரவு 2.30 மணிக்கு சென்னை ஜாம்பஜார் கிளைத் தலைவர் யாகூப் அவர்களை வீடு புகுந்து கைது செய்து, முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, முஸ்லிம் பெண்களை இழிவாகப் பேசியதைக் கண்டித்தும், அன்று மாலை 4 மணிக்கு இதற்கு நியாயம் கேட்க அணி திரண்ட முஸ்லிம்கள் மீது தடியடி நடத்தியதற்கு காரணமாக இருந்த துணை ஆணையாளர் கிரி மற்றும் உதவி ஆணையாளர்கள் செந்தில் குமரன் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எதிர்வரும் 03.01.2013 வியாழன் அன்று ஒரு லட்சம்பேர் பங்கு பெறும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. காவல்துறை உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் மாநில நிர்வாகிகளிடம் ஒரு வாரத்தில் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி மொழி அளித்ததை ஏற்று இப்போராட்டம் இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் 10.01.2013 வியாழன் அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநித் தலைமையகம், சென்னை
மாநித் தலைமையகம், சென்னை
அற்பமானவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளா?
நமதூர் ரஹ்மத் நகரில் ஒருவீட்டில் கத்தரிக்காயில் அல்லாஹ் என்று எழுதியுள்ளதாக கூறுகின்றனர், அல்லாஹ்வின் படைப்புகளில் இது போன்ற வித்தியாசமான தோற்றம் கொண்டவை ஏராளம் உள்ளன. ராம், ஓம், சிலுவை, சூலாயுதம் இன்னும் பல்வேறு மதங்களுடன் சமந்தப்பட்ட வடிவங்களுடன் மரங்களும், மலைப்பறைகளும், கால்நடைகளின் தோள்களிலும் காணப்படுகின்றன. ஓவ்வொருவரும் இது போன்றதை எடுத்துக் காட்டி தங்கள் மதத்தை மெய்ப்பிக்க வந்த அத்தாட்சி என்று கூறுகின்றனர்.
தற்செயலாக அமைந்த இது போன்றவற்றை எல்லாம் அத்தாட்சி என வாதிட்டால் எல்லா மதத்தவர்களிடமும் இது போன்ற அத்தாட்சிகள் அதிகமதிகம் உள்ளன. சிலுவை போலவும், மேரி போலவும் வடிவத்தில் பல்லாயிரம் பொருட்கள் உள்ளன. இவர்கள் வாதப்படி இவையும் அத்தாட்சிகள் என்று ஏற்றுக்கொள்ளமுடியுமா?
மாற்றுமதத்தினர் தங்கள் வேதநூல்களில் இருந்தது எதையாவது எடுத்துக்காட்டி தங்கள் மதத்தை நிரூபிக்க முடியாது என்பதால் இதுபோன்ற அற்பமான ஆதாரங்களை தூக்கிப்பிடிக்கின்றனர், சரக்கு இல்லாத வியாபாரிதான் களிடப்பவை வைத்து வியாபாரம் பண்ணவேண்டும், சத்தியமார்க்கத்தில் இருக்கும் நமக்கு அது அவசியமில்லை.
அல்லாஹ் என்ற அரபு எழுத்து எழுதப்பட்டுள்ளது என்று நீங்கள் காட்டினால் இல்லை சூலம் தான் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்று ஹிந்துக்கள் கூறுவார்கள்.
மூஸா நபி இலேசாக பாறையில் தட்டியவுடன் தண்ணீர் பீறிட்டு அடித்தது. இது போல் எவரும் செய்ய முடியாது என்பதால் இதை அத்தாட்சி எனலாம்.
கத்தரிக்காய் ஓரிருநாளில் அழுகிவிட்டால் அதிலுள்ள வடிவம் மறைந்துவிடும், இறைவனின் அத்தாட்சிகள் இவ்வளவு பலவீனமாக வலிமையற்றதாக ஒருக்காலும் இருக்க முடியாது.
அத்தாட்சிகள் என்பன, ஒரே இறைவன் இருக்கிறான் என்பதைத் தெளிவாக அறிவிக்கும். நீங்கள் கூறுபவற்றை எல்லாம் அத்தாட்சிகள் என்று எடுத்துக் கொண்டால் பல கடவுள் உள்ளனர் என்பதற்கும் இது போன்ற அத்தாட்சிகளை (?) மற்றமதத்தவர்களும் காட்டுவார்கள்.
அல்லாஹ்வைப் பற்றியும் அவனது அத்தாட்சிகள் பற்றியும் அறிவு இல்லாதவர்கள் தான் மாயைகளை அத்தாட்சி என்பர்.
வானங்கள், பூமி, சூரியன், கோள்கள், மழை மேகங்கள், விண்மீன்கள், காற்று, பயிர்கள் முளைப்பது, கருவில் மனிதன் வளர்வது, மனிதனுக்குள்ளே அமைக்கப்பட்டுள்ள வியக்க வைக்கும் அற்புதங்கள் என கோடானு கோடி அத்தாட்சிகளை அல்லாஹ் காட்டிக் கொண்டே தான் இருக்கிறான்.
இத்தகைய பிரம்மாண்டமான மலைக்கச் செய்யும் அத்தாட்சிகளை விட்டு விட்டு அற்பமானவைகளை அத்தாட்சி என்று கூறுவது முற்றிலும் தவறாகும்.
கோடி கோடியாக செல்வம் வைத்திருப்பவன் செல்லாத காலணாவைப் பெரிதாக நினைப்பது போலவே இவர்களின் நிலைமை அமைந்துள்ளது.
இத்தகைய அற்பமான தற்செயலானவற்றை அத்தாட்சி என்று கூற ஆரம்பித்தால் நிச்சயம் நீங்கள் தோற்று விடுவீர்கள்! இது போன்ற செல்லாக்காசுகள் உங்களை விட மற்றவர்களிடம் மூட்டை மூட்டையாகக் குவிந்துள்ளன.மாற்றுமதார்களிடமும் எடுத்து சொல்லவேண்டிய அதிசயங்கள் ஆயிரமாயிரம் குரானில் குவிந்துகிடக்கின்ற நிலையில் அற்பமானவற்றை இப்படி பரப்புவதால் எந்தபயனும் இல்லை.
Subscribe to:
Comments (Atom)


