| வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பொறியியல் படிக்க வாய்ப்பு... | |
அண்ணா பல்கலைக்கழகத்தில், வெளிநாட்டில் வேலை செய்யும் இந்திய மாணவர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ், பொறியியல் படிப்புகளில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வரும் கல்வியாண்டில் பி.இ, பி.டெக், பி.ஆர்க், எம்.பி, எம்.டெக், எம்.பி.ஏ, எம்.எஸ்சி ஆகிய படிப்புகளுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒதுக்கீட்டின் படி மாணவர் சேர்க்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவங்களை பல்கலைக்கழக வளாகத்தில் பெற்று கொள்ளலாம் அல்லது பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் (யூஎஸ் $200)விண்ணப்பக் கட்டணமாக வரைவோலை எடுத்து Director, Centre for International Affairs. Anna University. Chennai என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இளநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 15ம் தேதி கடைசி நாளாகும். முதுகலை மற்றும் அயல்நாட்டு மாணவர்கள் இளநிலை, முதுகலை பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விரிவான தகவல்களுக்கு http://www.annauniv.edu/cia/advertisement%20%28cnf%29.pdf என்ற இணையதளத்தை அணுகலாம்.
நன்றி:- தினமணி
| |
Tuesday, 9 April 2013
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பொறியியல் படிக்க வாய்ப்பு...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment